நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியில் 65 புதியக் கோள்களை நாசா கண்டறிந்து உள்ளது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பானது இது வரை கண்டறியப்பட்ட புறக்கோள்களின் எண்ணிக்கையினை 5000க்கு மேல் உயர்த்தியது.
இவற்றுள் சில புவியை ஒத்துள்ளன.
இந்தக் கோள்களின் மேற்பரப்பில் நுண்ணுயிரிகள், நீர், வாயு மற்றும் உயிரினங்கள் உள்ளனவா என்று அறிவதற்காக புதிதாக கண்டறியப்பட்ட இந்த 65 புறக்கோள்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.