TNPSC Thervupettagam
January 4 , 2023 565 days 429 0
  • 2022-2023 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 51,000 கோடி ரூபாய் நிதி திரட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
  • இது மாநில மேம்பாட்டுக் கடன்கள் எனப்படும் முறையில் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் திரட்டப் படும்.
  • இது 2022 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (Q4) பெறப்பட்ட 35,000 கோடி ரூபாயை விட 45.7% அதிகமாகும்.
  • 2022 ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலாண்டில் மாநில அரசு 49,000 கோடி ரூபாயினைக் கடனாகப் பெற்றுள்ள நிலையில், இது 2021 ஆம் நிதியாண்டின் இதே கால கட்டத்தில் பெறப்பட்ட 52,000 கோடி ரூபாயை விடக் குறைவாகும்.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் (அக்டோபர் மாதம் வரை) தமிழக அரசின் மொத்த வருவாய் வரவு 1,29,600.46 கோடியாகும்.
  • இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த 1,01,047.40 கோடி ரூபாயிலிருந்து 28.3% அதிகமாகும்.
  • 2022 ஆம் நிதியாண்டின் அக்டோபர் மாத இறுதி நிலவரப்படி தமிழக மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை 25,931.10 கோடி ரூபாயாக உள்ளது.
  • இது 2021 ஆம் நிதியாண்டின் அக்டோபர் மாத இறுதியில் 28,108.69 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2021-22 ஆம் நிதியாண்டில், மாநிலத்தின் மொத்தக் கடன்கள் 87,000 கோடியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்