ஆகஸ்ட் 27 அன்று அருணாச்சலப் பிரதேச மாநில சட்டசபையானது இந்திய அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் அந்த மாநிலம் இணைக்கப் படுவதற்குத் தேவையான தீர்மானம் ஒன்றை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
6வது அட்டவணையானது வடகிழக்கில் பழங்குடியினரின் உரிமைகளுக்குப் பாதுகாப்பை அளிக்கின்றது.
6வது அட்டவணையானது பழங்குடியினச் சமூகத்தினருக்குத் தேவையான தன்னாட்சியை வழங்குவதுடன் அம்மாநிலத்தின் நிலப் பாதுகாப்பிற்கு தேவையானச் சட்டங்களை இயற்றுவதற்கு அந்த ஆணையத்திற்கு வேண்டிய அதிகாரங்களை வழங்குகின்றது.