தேசிய மின்னாளுகை சேவை வழங்கீட்டு மதிப்பீடு (NeSDA) - மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கான முற்போக்கு மாதாந்திர அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
இது மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் முழுவதுமான மின்னாளுகை சேவை வழங்கலின் நிலை பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் 14,736 மின்னாளுகை சேவைகள் வழங்கப் படுகின்றன.
ஜூலை மாத அறிக்கையிலிருந்து இதில் 6.2% (869) சேவை வழங்கீடுகள் அதிகரித்து உள்ளன.
ஜம்மு மற்றும் காஷ்மீர், கேரளா மற்றும் ஒடிசா ஆகியவை முழு அளவிலான சேவைகளை, அவற்றின் அடையாளம் காணப்பட்ட ஒருங்கிணைந்த ஒற்றைச் சேவை வழங்கீட்டுத் தளங்கள் மூலம் வழங்குகின்றன.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் 1,368 மின்னாளுகை சேவைகள் பதிவாகியுள்ளன.
ஹரியானா இந்தத் துறையில் அதிகபட்ச மின்னாளுகை சேவைகளை வழங்குகிறது (149).
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (96) மற்றும் ஜார்க்கண்ட் (89) ஆகியவை உள்ளன.
குழந்தைத் தொழிலாளர் மீட்பு சார்ந்த வழக்கு மேலாண்மையை எளிதாக்கும் வகையிலான வலைதளம் அடிப்படையிலான குழந்தைத் தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பினை (CLTS) பீகார் அரசு தொடங்கியுள்ளது.
குஜராத் அரசானது, வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை வழங்குநர்களை வெளிப்படையான மற்றும் பயனர்களுக்கு ஏற்ற முறையில் ஒரு தானியக்க பொருத்த அமைப்பு மூலம் இணைக்க வழிவகுக்கும் ‘அனுபந்தம்’ என்ற அமைப்பினை உருவாக்கி உள்ளது.
உத்தரகாண்ட் அரசானது, அம்மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளையோர்களுக்கு ரோஜ்கர் பிரயாக் இணைய தளம் மூலம் வேலை வாய்ப்புத் தகவல்களை வழங்குகிறது.