இந்திய வன மனிதன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான ஜாதவ் பாயெங் 2020 ஆம் ஆண்டில் 6வது வருடாந்திர சுவாமி விவேகானந்தா கர்மயோகி விருது வழங்கப் பெற இருக்கின்றார்.
காடு வளர்ப்பின் மூலம் மனிதனால் உருவாக்கப்படும் காடுகளை உருவாக்குவதில் அவர் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்காக அவர் கௌரவிக்கப் படுகின்றார்.
2015 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயரிய குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ விருதானது இவருக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் தனித்துவமான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக கர்மயோகி விருதானது அவருக்கு வழங்கப் படுகின்றது.