ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்களை சரயு ஆற்றங்கரையில் ஒளிரச் செய்து அயோத்தி நகரில் புதிய வரலாறு ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த அரிய செயலின் மூலமாக உத்தரப் பிரதேச அரசு ஏற்கனவே எண்ணெய் விளக்குகளை மிகப் பெரிய அளவில் காட்சிப்படுத்திய தனது சொந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது.
இந்த ஆண்டில் சரயு ஆற்றங்கரையில் ஏற்றப் பட்ட மண் விளக்குகளின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டில் ஏற்றப் பட்ட தீபங்களின் எண்ணிக்கையான மூன்று லட்சம் என்பதற்கும் அதிகமாக இருந்தது.