சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழங்காலப் பெருங்கடலைச் சேர்ந்ததாக நம்பப்படும் நீர்த்துளிகள் கனிமப் படிவுகளில் காணப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
700 முதல் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியானது அடர்த்தியான பனிக் கட்டிகளால் மூடப் பட்டிருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
இந்த காலக் கட்டம் ஆனது பனிப்பந்து போன்ற புவிப் பனிப்பாறை என அழைக்கப் படுகிறது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து பூமியின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனின் அளவு அதிகரிக்க வழி வகுத்த இரண்டாவது பெரிய ஆக்ஸிஜனேற்ற நிகழ்வு நிகழ்ந்தது.
இந்த நிகழ்வானது சிக்கலான உயிரின வடிவங்களின் பரிணாமத்திற்கு வழி வகுத்தது.