சமீபத்தில், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னமடா ஏரியில் நடத்தப் பட்ட 68வது நேரு டிராபி படகுப் போட்டியில் பள்ளத்துருத்தி படகுக் குழுமம் வெற்றி பெற்றது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தப் பகுதிக்கு விஜயம் செய்ததையும், ஆலப்புழா ஏரியில் அவர் படகுச் சவாரி செய்ததையும் நினைவு கூரும் வகையில் 1952 ஆம் ஆண்டு நேரு டிராபி படகுப் போட்டி நிறுவப் பட்டது.