உத்தரப் பிரதேச தினக் கொண்டாட்டமானது 2021 ஆம் ஆண்டில் ஜனவரி 24 முதல் ஜனவரி 26 வரை நடைபெற்றது.
2021 ஆம் ஆண்டிற்கான உத்தரப் பிரதேச தினத்தின் கருத்துரு ‘சுயச் சார்பு கொண்ட உத்தரப் பிரதேசம், பெண்கள், இளம் விவசாயிகள் மற்றும் அனைவருக்குமான வளர்ச்சி என்பதற்கான மரியாதை’ (Respect for self-reliant Uttar Pradesh, women young farmers, development of all) என்பதாகும்.
இந்த நிகழ்வில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் ‘உதயம் சாரதி’ என்ற செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது ஒரு மாவட்டம் ஒரு பொருள் தயாரிப்பு (One District One Product) என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் உத்தரப் பிரதேச மாநிலம் மறு பெயரிடப் பட்டது.
முன்னதாக இது ஐக்கிய மாகாணம் (United Provinces) என்று அழைக்கப்பட்டது.