பாகிஸ்தானின் டான் பத்திரிக்கையின் ஆசிரியரும் கட்டுரையாளருமான சிரில் அல்மெய்டா சர்வதேச பத்திரிக்கை நிறுவனத்தின் (IPI - International Press Institute) 2019 ஆம் ஆண்டிற்கான 71வது உலகப் பத்திரிக்கைச் சுதந்திரத்தின் நாயகன் விருதைப் பெற்றுள்ளார்.
இவ்விருதானது பாகிஸ்தானின் அரசு மற்றும் இராணுவத்தினருக்கிடையேயான உறவுகளின் மீதான விமர்சனம் மற்றும் உறுதியான உள்ளடக்கம் ஆகியவற்றிற்காக இவருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதானது 2019 ஆம் ஆண்டின் ஜுன் 05 அன்று உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ள IPI-ன் வருடாந்திர கூடுகை மற்றும் பொதுச் சபை நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளது.