இந்தியா உள்ளிட்ட 120 நாடுகளைக் கொண்ட ஒரு கூட்டணியானது உலக சுகாதார நிறுவனத்தில் (WHO - World Health Organization) ஆஸ்திரேலியா முன்மொழிந்த ஒரு தீர்மானத்திற்கு தங்களது ஆதரவை அளித்துள்ளன.
கோவிட் – 19 தொற்றின் பூர்வீகம் குறித்து சீனா மீது விசாரணை நடத்துவதற்காக “கோவிட் – 19 எதிர்வினை மீதான தீர்மானம்” என்ற தீர்மானத்திற்கு இவை ஆதரவு அளித்துள்ளன.
இது கோவிட் – 19 வைரஸின் பூர்வீகம் குறித்து நடத்தப்படும் ஒரு தனிச்சுதந்திர விசாரணைக்கான ஒரு தீர்மானமாகும்.
சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்தத் தீர்மானத்தின் ஒரு பகுதியாக இல்லை.
மேலும் சீனா இந்த விசாரணைக்கு எதிராக உள்ளது.
தற்பொழுது கிடைத்திருக்கும் தகவல்கள் கொரானா வைரஸ் ஒரு விலங்குவழி நோய் என்பதனை உறுதி செய்கின்றன.
விலங்குவழி நோய் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு நோயாகும்.
உலக விலங்கு நல அமைப்பானது இந்த வைரஸின் விலங்குவழி நோயின் பூர்வீகம் குறித்து ஆய்வு செய்வதற்காக கள அடிப்படையிலான திட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றது.
உலக சுகாதார மன்றமானது WHO-ன் முடிவு எடுக்கும் ஒரு அமைப்பாகும்.
இந்தச் சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் போது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் சந்தித்துக் கொள்வர்.