இந்திய நாட்டையும் அதன் குடிமக்களையும் பாதுகாப்பதில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்திற்கு வணக்கம் செலுத்தும் வகையில் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
பிரிட்டிஷ் ஜெனரல் பிரான்சிஸ் புச்சரிடமிருந்து பொறுப்பினைக் கைப்பற்றி இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியாக ஃபீல்ட் மார்ஷல் K.M. கரியப்பா பதவி ஏற்றதை நினைவு கூறும் விதமாகவும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
புச்சர் 1949 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் ராணுவத் தளபதியாக இருந்தார்.
தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் உதவியுடன் புதிய ராணுவ போர்க்கள சீருடையானது உருவாக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள லோங்கேவாலா என்ற இடத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஒரு பிரம்மாண்ட நினைவுச் சின்ன தேசியக் கொடி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
காதி துணியால் நெய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி இதுவாகும்.
இந்த நினைவுச் சின்ன தேசியக் கொடியானது 225 அடி நீளமும், 150 அடி அகலமும், சுமார் 1,400 கிலோ எடையும் கொண்டதாகும்.
1971 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரின் ஒரு மையப் பகுதியாக லோங்கேவாலா திகழ்ந்தது.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் 02 அன்று லேவில் இந்த தேசியக் கொடி பறக்கவிடப் பட்டது முதல், தற்போது 5வது முறையாக இது பொது மக்கள் பார்வைக்கு பறக்க விடப் பட்டுள்ளது.