இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் ஷௌனக் சென்னின் 'ஆல் தட் ப்ரீத்ஸ்' திரைப் படமானது, 75வது கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் ஆவணப் படங்களுக்கான உயரிய விருதான லியொல் டி ஓர் 2022 விருதை வென்றது.
தில்லியின் வசிராபாத் அருகே ஒரு அடித்தளத்தில் காயமடைந்தப் பறவைகளை குறிப்பாக கரும் பருந்துகளை மீட்டுச் சிகிச்சை அளிக்கும் இரண்டு சகோதரர்களின் வாழ்க்கையைப் பற்றி இந்தப் படம் சித்தரிக்கிறது.
சிறப்பு நடுவர் விருதானது லிதுவேனியன் திரைப்படத் தயாரிப்பாளர் மன்டாஸ் குவேடராவிசியஸின் இறுதிப் படமான மரியுபோலிஸ் 2 என்ற திரைப்படத்திற்கு வழங்கப் பட்டது.
லியொல் டி ஓர் என்பது 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு ஆவணத் திரைப்பட விருது ஆகும்.
இது முதல் முறையாக 2015 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதியன்று வழங்கப்பட்டது.
கேன்ஸ் திரைப்பட விழாவின் ஒரு பிரிவில் திரையிடப்பட்ட ஒரு சிறந்த ஆவணப் படத்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது.