இது இந்திய இராணுவத்தின் முதல் இந்தியப் படைத் தளபதியான ஜெனரல் (ஃபீல்டு மார்ஷல்) K.M.கரியப்பா அவர்களின் சாதனைகளை நினைவு கூருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1949 ஆம் ஆண்டில் இந்நாளில் தான், கடைசி பிரிட்டிஷ் தலைமைப் படைத் தளபதியான ஜெனரல் சர் FRR புச்சரிடமிருந்து இந்திய இராணுவத்தின் தலைமைப் பொறுப்பை கரியப்பா ஏற்றார்.
இவர் சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தளபதி ஆனார்.
கரியப்பா மற்றும் பாதுகாப்புப் படைகளைக் கௌரவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.