குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஆயுதப்படைகள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை வீரர்களுக்கு 76 வீர தீர விருதுகளை வழங்க ஒப்புதல் அளித்து உள்ளார்.
இதில்,
4 கீர்த்தி சக்ரா (மறைவிற்குப் பின்),
11 சௌர்ய சக்ரா(இதில் ஐந்து விருதுகள் மறைவிற்குப் பின்),
2 சேனா பதக்கங்களுக்கு இணையான விருதுகள்,
52 சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்),
3 நாவோ சேனா பதக்கம் (வீரதீரச் செயல்) மற்றும்
4 வாயு சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்).
இராணுவத்திற்கான விருதிற்குப் பரிந்துரைக்கப்படும் 30 வீரர்களின் பட்டியலுக்கும் குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.
பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் ஒரு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை ஆற்றியதற்காக இராணுவச் சேவையில் ஈடுபட்ட மது என்ற நாய் (மறைவிற்குப் பின்), மற்றும் விமானப்படை வீரர்களில் ஒருவர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட உள்ளன.