டெல்லியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகம் - தடயவியல் சேவை அமைப்பானது 2021 ஆம் ஆண்டிற்கான SKOCH விருதினை (வெள்ளி) வென்றுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்முறைகள் போன்றவற்றை எதிர்த்துப் போராடியதற்காக ஆளுகைப் பிரிவில் இந்த அமைப்பானது அந்த விருதைப் பெற்றது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 06 அன்று நடைபெற்ற 78வது SKOCH உச்சி மாநாட்டின் போது இந்த விருதானது வழங்கப்பட்டது.
இந்த உச்சி மாநாடானது, "ஆளுகை நிலை" என்ற கருத்துருவுடன் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த SKOCH விருது இந்தியாவின் ஒரு உயரிய குடிமை விருது ஆகும்.
சிறந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்காக உழைக்கும் மக்கள், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கச் செய்வதற்காக வேண்டி ஒரு தன்னார்வ அமைப்பால் இது வழங்கப் படுகின்றது.
புனே சர்வதேச மையத்தின் முன்னணி உறுப்பினர்களால் எழுதப்பட்ட ‘Rising to the China Challenge: Winning Through Strategic Patience and Flexible Policies' என்ற புத்தகத்திற்கு 2021 ஆம் ஆண்டிற்கான SKOCH இலக்கிய விருதானது வழங்கப் பட்டது.
இந்தப் புத்தகமானது ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியா லிமிடெட் பதிப்பகத்தினால் 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
சீனாவின் தூண்டுதலால் 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புத்தகமானது எழுதப்பட்டது.