TNPSC Thervupettagam

8 வது இந்தோ - செசெல்ஸ் இராணுவ கூட்டுப்போர் பயிற்சி (February 24-March 4)

March 1 , 2018 2334 days 676 0
  • இந்திய இராணுவம் மற்றும் செசெல்ஸ் நாட்டு மக்கள் பாதுகாப்புப் படைக்கு இடையேயான 8-வது இராணுவ கூட்டுப்போர் பயிற்சி செசெல்ஸ் (Seychelles) நாட்டின் மாஹே தீவில்  நடைபெற்று  வருகின்றது.
  • கிளர்ச்சித்தடுப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மீதான இந்தியா மற்றும்  செசெல்ஸ் நாட்டிற்கிடையேயான இந்தக்  கூட்டுப்போர் பயிற்சியின் பெயர் “லமிட்யே” (Lamitye) ஆகும். இதன் பொருள்   நட்புறவு  (Friendship) என்பதாகும்.
  • 2001 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மற்றும் செசெல்ஸ் நாட்டிற்கிடையே இந்த இருதரப்புக் கூட்டுப்போர் பயிற்சி நடத்தப்பட்டு வருகின்றது.
  • இரு வருடங்களுக்கு ஒருமுறை (Biennial) நடத்தப்படும் இக்கூட்டுப் போர் பயிற்சியின் நோக்கம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சித் தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் இணைந்து செயலாற்றும் தன்மையை  (Interoperability) மேம்படுத்துவதாகும்.
  • ஐ.நா. சாசனத்திற்கு உட்பட்டு பகுதி-நகர்ப்புற (Semi-urban) சூழலில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தற்போது இந்தக்  கூட்டுப்போர் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்