TNPSC Thervupettagam

9வது இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா - முத்தரப்பு சந்திப்பு

April 11 , 2018 2293 days 704 0
  • 9வது இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முத்தரப்பு சந்திப்பு புதுதில்லியில் நடந்தது.
  • மூன்று நாடுகளும் இந்திய-பசிபிக் பகுதியில் மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகளை அதிகரித்திட தொடர்ந்து ஒத்துழைப்பது என உறுதியேற்றுக் கொண்டுள்ளன.

  • இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த பொழுது ஆரம்பிக்கப்பட்டது.
  • அமைச்சர்கள் மட்டத்திலான முத்தரப்பு துவக்க பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் 2015ஆம் ஆண்டில் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு துணைக் கூட்டத்தில் அப்போதைய அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜான் கெர்ரியால் நடத்தப்பட்டது.
  • அமைச்சர்கள் மட்டத்திலான கடைசி பேச்சுவார்த்தை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்