பீகார் மாநிலத்தின் கோசி மற்றும் மீச்சி நதிகளை ஒன்றோடொன்று இணைக்கும் 4900 கோடி ரூபாய் அளவிலான கோசி – மீச்சி நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது..
மத்தியப் பிரதேசத்தின் கென்-பெட்வா திட்டத்திற்குப் பிறகு அரசால் அங்கீகரிக்கப்படும் இரண்டாவது மிகப் பெரிய நதிகள் இணைப்புத் திட்டம் இதுவாகும்.
இத்திட்டமானது பின்வரும் பயன்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்குப் பீகாரை (குறிப்பாக சீமாஞ்சல் பகுதி) தொடர்ச்சியான வெள்ள அபாயத்திலிருந்து விடுவித்தல்
அதனைச் சுற்றியுள்ள 2.14 லட்சம் ஹெக்டர் நிலங்களுக்கு நீர்ப் பாசனம்.