TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 27 , 2019 1821 days 1141 0
  • மத்திய அரசின் முதன்மைத் திட்டமான “ஆயுஷ்மான் பாரத்” என்ற திட்டத்தைச் செயல்படுத்தும் “தேசிய சுகாதார ஆணையமானது” மருத்துவச் சேவைகளை அளிப்பதை ஒழுங்குபடுத்துவதற்காகவும் திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும் இந்திய சுகாதார நலக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • காந்தியின் 150-வது நினைவு தினக் கொண்டாட்டத்தின் போது, தமிழ்நாடு அஞ்சல் துறையானது “தமிழ்நாட்டில் காந்திஜியின் முதல் அடிச்சுவடு” என்ற கருப்பொருள் கொண்ட சிறப்பு அஞ்சல் உறை மற்றும் அஞ்சல் முத்திரையை வெளியிட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு பிர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் “துப்பாக்கி சுடுதல்” பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செப்டம்பரில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கூட்டமைப்பின் (Indian Olympic Association - IOA) பொதுச் சபைக் கூட்டத்திலிருந்து இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு வெளியேறியுள்ளது.
  • “தண்ணீர் திருட்டிற்கு” 2 ஆண்டு சிறைத் தண்டனையுடன் மிகக் கடுமையான தண்டனையை அளிக்க வழிவகை செய்யும் “குஜராத் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் (திருத்த) மசோதாவை” குஜராத் நிறைவேற்றியுள்ளது.
  • குஜராத்தில் உள்ள கிர் சரணாலயத்தில் ஒரு சிறப்பு அவசர வாகனத்தின் உதவியுடன் ஒரு சிங்க குட்டி மீட்கப்பட்டுள்ளது.
    • கடந்த மாதம் குஜராத் அரசினால் தொடங்கப்பட்ட சிங்கங்களுக்கான  ஒரு சிறப்பு அவசர ஊர்தி சேவை முன்னெடுப்புக்குப் பின்பு நடந்த முதலாவது நிகழ்வு இதுவாகும்.
  • உலகக் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரான கபில் தேவின் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிடம் இந்தியாவின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • முன்னாள் மகளிர் கிரிக்கெட் அணித் தலைவரான சாந்தா ரங்கசாமி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அன்சுமன் கெயிக்வாட் ஆகியோர் இக்குழுவில் உள்ள பிற உறுப்பினர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்