TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 15 , 2019 1803 days 860 0
  • அலெஜான்ட்ரோ கியாமேட்டி என்பவர் கவுதமாலா நாட்டின் புதிய ஜனாதிபதியாக வென்றுள்ளார். இவர் சாண்ட்ரா டோரஸ் என்பவருக்கு எதிராக தேர்தலின் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார்.
  • 2021ம் ஆண்டு முதல் யானைத் தந்தங்களுக்கான உள்நாட்டு விற்பனை மீது தடை விதிக்கப் போவதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, WHO தெற்கு-கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் தட்டம்மையை ஒழிப்பதிலும் ரூபெல்லாவைத் தடுப்பதிலும் பூடான், மாலத் தீவுகள் மற்றும் திமோர்-லெஸ்தி நாடுகளுக்குப் பிறகு இலங்கை நான்காவது நாடாக இருக்கின்றது.
  • மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 42 சதத்தைப் பூர்த்தி செய்து சவுரவ் கங்குலிக்கு (11363) அடுத்தபடியாக இரண்டாவது அதிகபட்ச இந்திய ரன் குவிப்பாளராக உருவெடுத்துள்ளார். தற்போது கோலி சச்சின் டெண்டுல்கரை அடுத்து உள்ளார்.
  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதல்முறையாக இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில் காங்கிரஸின் வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். 1991 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து ஐந்து முறையாக அவர் அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்