2019 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் (Armed Forces (Special Powers) Act - AFSPA) கீழ் மேலும் 6 மாத காலத்திற்கு நாகாலாந்து மாநிலம் முழுவதையும் ‘பாதிக்கப்பட்டப் பகுதியாக’ மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
AFSPA பற்றி
ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டமானது (AFSPA) 1958 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை அதிகரிக்கும் சூழலில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
AFSPA ஆனது பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்காக பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரத்தை அளிக்கின்றது.