TNPSC Thervupettagam

AMRITH நடவடிக்கை – கேரளா

January 18 , 2024 183 days 193 0
  • கேரள மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் AMRITH நடவடிக்கையின் கீழான சோதனைகளைத் தொடங்கி உள்ளது.
  • AMRITH என்பது முழு ஆரோக்கியத்திற்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் எதிர்ப்பாற்றல் தடுப்பு நடவடிக்கை என்பதைக் குறிக்கிறது.
  • இது மாநிலத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அதிகப்படியான பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மருந்து சீட்டின்றி செய்யப்படும் (OTC) விற்பனையைத் தடுப்பதன் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கையை அத்துறை மேற்கொண்டு வருகிறது.
  • நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் OTC விற்பனையைக் கண்டறிவதற்காக சில்லறை மருந்து விற்பனை கடைகளில் திடீர் சோதனைகளை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு AMRITH நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
  • மேலும் மருந்து விற்பனைக் கடைகளுக்கு எதிராக புகார் தெரிவிக்க 18004253182 என்ற இலவச எண் (டோல் ஃப்ரீ எண்) அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்