TNPSC Thervupettagam

AMRUT (அம்ருத்) திட்டம் – நீட்டிப்பு

December 21 , 2019 1953 days 3983 0
  • இந்தத் திட்டமானது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.
  • இந்திய அரசானது அதன் முதன்மைத் திட்டமான AMRUT (புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டம்) திட்டத்திற்கான காலக்கெடுவை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு, அதாவது 2022 ஆம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது.

AMRUT திட்டம் பற்றி

  • இந்தத் திட்டமானது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நகர்ப்புறங்களைப் புதுப்பிக்கும் நோக்கத்துடன் பிரதமர் மோடியால் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • இந்தத் திட்டத்திற்கு முன்பு ஜவஹர்லால் நேரு தேசிய நகரப் புதுப்பித்தல் என்ற திட்டம் செயல்பாட்டில் இருந்தது.
  • நீர் வழங்கல், கழிவுநீர் மேலாண்மை போன்ற முக்கியமான பகுதிகளில் இந்தத் திட்டமானது கவனம் செலுத்த இருக்கின்றது.
  • இந்தத் திட்டமானது அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுடன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அனைத்து சிறு நகரங்களையும் பெரு நகரங்களையும் உள்ளடக்கிய 500 நகரங்களை உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்