TNPSC Thervupettagam
May 27 , 2020 1518 days 645 0
  • அண்டார்டிக் பிராந்தியத்தில் பனியில் இருந்து அதிக ஆற்றல் துகள்கள் வெடிப்பதை நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த துகள்கள் நமது பிரபஞ்சத்திற்கு இணையான  மற்றோரு பிரபஞ்சத்திற்கு ஆதாரம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
  • ANTIA (Antarctic Impulsive Transient Antenna) – அண்டார்டிக் உந்துவிசையாலான நிலையற்ற ஆண்டெனா அண்டார்டிக் பகுதியின் பனிக்கட்டிகளால் வெளியேற்றப் படும் ரேடியோ கதிர் துடிப்புகளைக் கண்டறியும்.

 

  • அஸ்காரியன் விளைவு காரணமாக பனியில் உள்ள நியூட்ரினோக்கள் ரேடியோ கதிர் துடிப்புகளை உருவாக்குகின்றன.
  • அஸ்காரியன் விளைவு என்பது ஒரு துகள் ஒரு அடர்த்தியான மின்சார ஊடகத்தில் ஒளியை விட வேகமாக  பயணிக்கும் ஒரு நிகழ்வு ஆகும்.
  • இது நாசாவின் நியூட்ரினோக்களுக்கான முதல் ஆய்வகமாகும்.
  • நியூட்ரினோக்கள் மட்டுமே தன் வீரியம் குறையாமல் பூமியை வந்து சேரும் ஒரே துகளாகும்.
  • நியுட்ரினோக்கள் நமக்கு எந்த வித ஆபத்தையும் தராத உயர்சக்தி துகள்களாகும். இது யாரும் அறியா வண்ணம் பெருமளவில் திடப் பொருட்களின் வழியே ஊடுருவிச் செல்கின்றது.
  • நியுட்ரினோக்கள் தொடர்ச்சியாக புவியைத் தாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. மேலும் 100 ட்ரில்லியன் நியுட்ரினோக்கள் ஒவ்வொரு நொடியும் நமது உடலின் வழியே ஊடுருவிச் செல்கின்றது.
  • அரிதாகவே அவை ஏதேனும் ஒரு நிறையின் மீது எதிர்ச் செயலாற்றுகின்றது. 
  • ஆனால் ஒருவேளை அவை ஏதேனும் ஒரு அணுவைத் துளைத்து அதனுள் உட்சென்றால், நாம் உணரும் வகையில் இருக்கும் இரண்டாம்நிலை மின்னேற்றத் துகள்களின் பொழிவைத் தூவுகின்றது. 
  • அது நம்மை அத்துகள்கள் இப்பிரபஞ்சத்தில் எங்கிருந்து வருகின்றன என்பதை ஆராயச் செய்திடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்