ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஏ.பி.பி.எஸ்.சி (ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்) ஆட்சேர்ப்பு பணியில் உள்ள “நேர்காணல் நிலையை” நீக்க முடிவு செய்துள்ளார்.
இதன் படி ஜனவரி 2020 முதல் பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் எந்தவொரு நேர்காணலுக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. தேர்வுகளில் அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அவர்கள் பணியமர்த்தப் படுவார்கள்.
பணியமர்த்தல் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு படியாக இந்த முடிவு பாராட்டப் படுகிறது.
ஒவ்வொரு ஜனவரி மாதமும் ‘ஆட்சேர்ப்பு மாதமாக’ கடைபிடிக்கப்படும் என்று மாநில அரசு முன்பு அறிவித்திருந்தது.
அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப மாதம் முழுவதும் ஆய்வு நடத்தப் படும்.