அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு வழங்க வழி வகுக்கும் AUKUS கூட்டமைப்பிற்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகமையில் மேற் கொள்ளப்பட்ட ஒரு வரைவுத் தீர்மானத்திலிருந்து சீனா பின் வாங்கியது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் AUKUS (ஆஸ்திரேலியா, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா) பாதுகாப்புக் கூட்டாண்மை அறிவிக்கப்பட்டது.
இது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான தொழில் நுட்பத்தைப் பெறுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு உதவி வழங்கும்.
இந்த முயற்சியானது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) கீழ் தங்கள் பொறுப்புகளை மீறுவதாக சீனா கூறியது.
இது சம்பந்தமாக சர்வதேச அணுசக்தி முகமை மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் சீனா விமர்சித்தது.
இந்தியா உட்பட சர்வதேச அணுசக்தி முகமையில் 35 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.