TNPSC Thervupettagam

B மொலாசஸ் மற்றும் கரும்புச் சாறிலிருந்து நேரடி முறையில் எத்தனால் தயாரித்தல்

July 30 , 2018 2182 days 695 0
  • மத்திய உணவு அமைச்சகம், கரும்புச்சாறு (அ) இடைநிலை விளைபொருளான ‘B’ மொலாசஸிலிருந்து நேரடியாக எத்தனால் தயாரிப்பதற்கு சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்குவது பற்றிய முடிவினை அறிவித்துள்ளது.
  • இது தொடர்பாக கரும்புக் கட்டுப்பாடு உத்தரவு, 1966 திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
  • கரும்புச்சாறு (அ) B மொலாசஸிலிருந்து எத்தனால் தயாரிப்பது அதிகப்படியான உற்பத்தியை திசைதிருப்ப உதவும்.
  • சர்க்கரை ஆலைகள் 2017-2018 கரும்புக் காலத்தின் போது OMC - களுக்கு (Overseas Manpower Corporation Ltd) எத்தனாலை விற்பதன் மூலம் 5,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
  • எத்தனாலை பெட்ரோலுடன் கலப்பதற்காக OMC ஆனது சர்க்கரை ஆலைகளிலிருந்து எத்தனாலை வாங்குகின்றன.
  • பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பது 10% வரை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது ஆனால், எத்தனால் போதிய அளவு இல்லாததால் 4% வரை மட்டுமே கலக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்