நிதி அமைச்சகம் ஆனது, வங்கிகளின் சொத்துக்களைப் பட்டியலிடுதல் மற்றும் ஏலம் விடுவதை மேலும் நெறிமுறைப் படுத்துவதற்காக 'BAANKNET' என்ற புதுப்பிக்கப்பட்ட இணைய வழி ஏல தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
'e-BKray' என்ற தளம் ஆனது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டது.
BAANKNET தளமானது, வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்காகவும் வாராக் கடன் (NPA) தொடர்பான வழக்குகளைத் தீர்க்கும் ஒரு செயல்முறையை மிகவும் நன்கு விரைவுபடுத்துவதற்காகவும் வேண்டி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
'e-BKray' என்பது பொதுத்துறை வங்கிகளின் மீட்பு நடவடிக்கைகளின் கீழ் அதற்கானச் சொத்துக்களை அகற்றுவதற்கான எண்ணிம ஏல தளமாகும்.