TNPSC Thervupettagam

'Beyond Basics' கணக்கெடுப்பு - பெரம்பலூர்

January 20 , 2024 181 days 223 0
  • 2023 ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கையின் 'Beyond Basics' கணக்கெடுப்பு ஆனது, 26 மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது.
  • 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 97.2% இளையோர்கள் ஏதேனும் ஒரு முறைசார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
  • அதில் 70.3% இளையோர்கள் அரசு நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
  • தமிழ்நாடு மாநிலத்தில் கணக்கெடுக்கப்பட்ட பதின்ம வயதினரில் நான்கில் ஒரு பகுதியினர், இரண்டாம் வகுப்பு நிலையிலான உரையைப் படிக்க முடியாத நிலையில் உள்ளனர் என்பதை இந்த அறிக்கைக் காட்டுகிறது.
  • அனைத்து மாவட்ட சராசரியுடன் பெரம்பலூர் மாவட்டத்தில் 25% பதின்ம வயதினரால் இரண்டாம் வகுப்பு நிலையிலான உரையைப் படிக்க முடியாத நிலையில் உள்ளனர் என்று குறிப்பிடுகிறது.
  • 2.8% இளையோர்கள் எந்த கல்வி நிறுவனத்திலும் சேரவில்லை என்பதோடு,மேலும் இது 14 முதல் 16 வயதிற்குட்பட்ட குழுவினருடன் ஒப்பிடும் போது 17 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழுவினர் மத்தியில் அதிகமாக இருப்பது கண்டறியப் பட்டது.
  • 17 முதல் 18 வயதிற்குட்பட்ட பிரிவில், 12.4% ஆண்கள் எந்தவொரு முறைசார் கல்வி நிறுவனங்களிலும் சேரவில்லை என்ற நிலையில் இது பெண்களில் 4% ஆக உள்ளது.
  • கூடுதலாக, 16.4% பேர் சில வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
  • பெரம்பலூரில் 14 முதல் 18 வயதுடைய அனைத்து பதின்ம வயதினரிடையே, 52.1% பேர் குறைந்த பட்சம் வகுத்தல் கணக்கினைச் செய்யக் கூடிய நிலையிலும், 78.3% பேர் குறைந்த பட்சம் ஆங்கில வாக்கியங்களைப் படிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.
  • டிஜிட்டல் சார்ந்த செயல்களைச் செய்யக்கூடிய நபர்கள் எண்ணிக்கை 63% என்ற என்ற அளவில் தேசிய சராசரி உள்ள அதே வேளையில், தமிழ்நாடு 68.3 சதவீதத்தினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்