ஒரு புதிய மதத்தை ஏற்றுக் கொள்வது எனும் "ஒரே நோக்கத்திற்காக" கட்டாயமாகவோ, தூண்டுதலின் பேரிலோ திருமணங்களின் மூலமாகவோ மதம் மாற்றுவதைத் தடுப்பதற்கான ஒரு மசோதாவை இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா இமாச்சலப் பிரதேச மத சுதந்திரச் சட்டம் -2006 என்ற சட்டத்தை ரத்து செய்தது.
இந்தப் புதிய மசோதாவின் படி, தலித்துகள், பெண்கள் அல்லது சிறார்களை மதமாற்றம் செய்தால் இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.