மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் தலைமையில் BIMSTEC அமைப்பின் 2வது வேளாண் அமைச்சர்கள் சந்திப்பினை இந்தியா நடத்தியது.
பூடான், வங்காள தேசம், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் BIMSTEC அமைப்பின் உறுப்பினர் நாடுகளுக்கு இடையே வேளாண் ஒத்துழைப்பை (2023-2027) வலுப்படுத்தச் செய்வதற்கான செயல் திட்டம் ஒன்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.
BIMSTEC அமைப்பானது 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இதில் வங்காள தேசம், பூடான், இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய ஐந்து தெற்காசிய நாடுகளும், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளும் அடங்கும்.