TNPSC Thervupettagam

கீழடியில் பழங்கால செங்கல் தொட்டி

September 3 , 2019 1782 days 660 0
  • சிவகங்கை மாவட்டத்தின் கீழடியில் நடந்த ஐந்தாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது தொல்பொருள் ஆய்வாளர்களால் செங்கல் தொட்டி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்த அகழ்வாராய்ச்சியானது மாநில தொல்பொருள் துறையால் நடத்தப்படுகிறது.
  • 3 முதல் 4 அடி நீளமும் சுமார் 2.5 அடி அகலமும் இரண்டு மீட்டர் ஆழமும் கொண்ட இந்தத் தொட்டியானது செங்கல்லினால் ஆன தரையையும் கொண்டது.

  • 2015 ஆம் ஆண்டில் இந்த இடத்தில் நடைபெற்ற இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தொட்டியின் கட்டமைப்புகளையே இதுவும் கொண்டுள்ளது.
  • இவற்றில் பல தொட்டிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்