இந்திய ரிசர்வ் வங்கியானது, சமீபத்தில் சில மையப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்கள் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்ளுதல் (C-KYC) தரவுத்தளத்தினை அதிக ஆபத்து மிக்கதாக வகைப்படுத்தியுள்ள நிலையில், இது நிதி நிறுவனங்களுக்கு ஒரு சவாலானச் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையானது, ஒளிப்படக் காட்சி மூலமான KYC அல்லது நேரடி முறை KYC போன்ற வாடிக்கையாளர் அங்கீகாரத்திற்கான மாற்று முறைகள் குறித்து ஒரு ஆய்வு செய்ய வங்கிகளைத் தூண்டியுள்ளது.
C-KYC என்பது வாடிக்கையாளரின் அனைத்துத் தனிப்பட்ட விவரங்களையும் சேகரித்து அதனைச் சேமித்து வைக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட களஞ்சியமாகும்.
இது அனைத்து KYC செயல்முறைகளையும் ஒரே தளத்தில் கொண்டு வர உதவுகிறது.
மத்தியக் கையகப்படுத்துதல் மற்றும் சொத்து மறுசீராக்கம் மற்றும் பங்குகள் மீதான வட்டி (CERSAI) பதிவகமானது C-KYC பதிவேட்டினை நிர்வகிக்கிறது.
2012-13 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் C-KYC குறித்து அறிவிக்கப் பட்டு, 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது.