அபுதாபியில் நடைபெற்ற இந்தியக் கடலோர நாடுகள் கூட்டமைப்பின் (Indian Ocean Rim Association - IORA) 19வது கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான வி.முரளிதரன் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தின் கருத்துரு, "இந்தியப் பெருங்கடலில் செழிப்புக்கான பாதையையும் பகிரப்பட்ட நோக்கத்தினையும் ஊக்குவித்தல்" என்பதாகும்.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஐக்கிய அரபு அமீரகமானது தென்னாப்பிரிக்காவிடமிருந்து IORAன் தலைவர் பொறுப்பினை ஏற்க இருக்கின்றது. இது இரண்டு ஆண்டு காலத்திற்கு, அதாவது 2021 ஆம் ஆண்டு வரை அந்த அமைப்பின் தலைவராகப் பணியாற்ற இருக்கின்றது.
IORA பற்றி
IORA என்பது இந்தியப் பெருங்கடலின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள 22 கடலோர நாடுகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேச அமைப்பாகும்.
இந்த அமைப்பானது முதன்முதலில் 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொரீஷியஸில் இந்தியக் கடலோர நாடுகளின் முன்னெடுப்பாக நிறுவப்பட்டது. பின்னர் இது 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முறையாகத் தொடங்கப்பட்டது.