TNPSC Thervupettagam

CBD COP16 2025 - காலி நிதி

March 4 , 2025 29 days 102 0
  • ரோம் நகரில் நடைபெற்ற உயிரியல் பன்முகத் தன்மை உடன்படிக்கை (CBD) மீதான COP16 மாநாடானது, உலகளாவிய அளவில் வளங்காப்பு இலக்குகளுக்கு நிதியளிப்பது தொடர்பான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தினை எட்டியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் கொலம்பியா நாட்டின் காலி நகரில் இடைநிறுத்தப்பட்ட மாநாடு ஆனது, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரோம் நகரில் மீண்டும் தொடங்கியது.
  • இந்த ஒப்பந்தம் ஆனது, CBD உடன்படிக்கையின் கீழ் நீண்டகால நிதி வழிமுறைகளை நிறுவுகிறது.
  • இதில் தற்போதுள்ள நிதி ஆதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் தனியார் துறைப் பங்களிப்புகள் மற்றும் கலப்பு நிதி போன்ற சில புதிய நிதி வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவை அடங்கும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் சுமார் 200 பில்லியன் டாலர்  நிதி திரட்ட என்று அரசாங்கங்கள் உறுதியளித்துள்ளன.
  • இது 2025 ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு சுமார் 20 பில்லியன் டாலர் உட்பட, 2030 ஆம் ஆண்டிற்குள் சர்வதேச நிதி ஆதாரங்களில் இருந்து ஆண்டிற்கு 30 பில்லியன் டாலராக நிதி திரட்டுவதும் அடங்கும்.
  • உலகளாவியச் சுற்றுச்சூழல் வசதி (GEF) ஆனது தனியார் துறையிலிருந்து 1.9 பில்லியன் டாலர் உட்பட கூடுதலாக சுமார் 22 பில்லியன் டாலர் நிதியுடன், ஏற்கனவே பல்லுயிர்ப் பெருக்க இலக்குகளை ஆதரிப்பதற்காக என 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது.
  • COP17 ஆனது 2026 ஆம் ஆண்டில் ஆர்மேனியாவில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்