TNPSC Thervupettagam
April 21 , 2024 89 days 194 0
  • மத்திய அரசானது தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக புதிய இணைய தளத்தினை அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த இணைய தளம் CDP-SURAKSHA என அறியப்படுகிறது.
  • SURAKSHA என்பது "ஒருங்கிணைந்த வள ஒதுக்கீடு, தகவல் மற்றும் பாதுகாப்பான தோட்டக் கலை உதவி ஆகியவற்றிற்கான அமைப்பு" என்பதைக் குறிக்கிறது.
  • இந்தியத் தேசியக் கொடுப்பனவு கழகத்தின் (NPCI) e-RUPI பற்றுச் சீட்டினைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் மானியங்களை உடனடியாக வழங்க இந்த தளம் வழி வகுக்கும்.
  • CDP என்பது தேசியத் தோட்டக்கலை வாரியம் சார்ந்த மத்திய அரசின் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
  • இதுவரையில் 55 தோட்டக்கலை தொகுப்புகள் (பகுதிகள்) கண்டறியப்பட்டு, அதில் சோதனை முறையில் மானியம் வழங்கப்படுவதற்காக 12 பகுதிகள் தேர்வு செய்யப் பட்டு ள்ளன.
  • மேற்கு வங்காளத்தில் ஒரு மலர் வளர்ப்பு தோட்டங்கள், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தேங்காய் தோட்டங்கள் மற்றும் குஜராத்தில் வெள்ளை வெங்காயத் தோட்டங்கள் ஆகியவற்றிற்கு அடுத்தடுத்து என்ற நிலையில் மேலும் நான்கு தொகுப்புகளுக்கு  இனி மானியங்கள் வழங்கப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்