இந்தியாவிற்கும் பேரிடர்களுக்கான நெகிழ் திறன் கொண்ட உள்கட்டமைப்பிற்கான (CDRI) கூட்டணிக்கும் இடையிலான தலைமையக ஒப்பந்தத்திற்கு (HQA) அங்கீகாரம் அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 2019 ஆம் ஆண்டு பருவ நிலை நடவடிக்கை உச்சி மாநாட்டின் போது பிரதமர் அவர்களால் பேரிடர்களுக்கான நெகிழ் திறன் கொண்ட உள்கட்டமைப்பிற்கான (CDRI) கூட்டணி தொடங்கப்பட்டது.
இது பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் நெகிழ்திறன் விவகாரங்கள் ஆகியவற்றில் உலகளாவியத் தலைமைத்துவத்தினைப் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சியாக கருதப் படுகிறது.
1947 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் (சிறப்புரிமை & பாதுகாப்பு) சட்டத்தின் 3வது சட்டப் பிரிவின் கீழ் கூறப்படும் பல விதிவிலக்குகள், பாதுகாப்புகள் மற்றும் சலுகைகளை வழங்குவதற்கு இந்த அங்கீகாரம் உதவும்.