பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT), 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பில் இருந்து இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலெதிர்ப்புக் குழுவிற்கு (CERT-In) விலக்கு அளிக்கும் அறிவிப்பைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இனி 2005 ஆம் ஆண்டின் RTI சட்டத்தின் எல்லைக்கு வெளியே செயல்படும் CERT-In அமைப்பானது அதன் செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய முக்கியத தகவல்களுக்கான பொதுமக்களின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.
இருப்பினும், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களுக்கு அந்த துணைப் பிரிவு பொருந்தாது.
புலனாய்வுப் பணியகம், வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம், அமலாக்கத் துறை இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் பிற முக்கிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.
CERT-In என்பது அச்சுறுத்தல் (ஹேக்கிங்) மற்றும் சட்ட விரோதப் பயன்பாடு (ஃபிஷிங்) போன்ற இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கான தேசிய அளவிலான முதன்மை நிறுவனம் ஆகும்.
இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.