சில குறிப்பிட்ட நாடுகளின் "சட்டப்பூர்வப் பாதைகளை" பயன்படுத்தி அமெரிக்க நாட்டிற்குள் புலம்பெயர்ந்தவர்களை அனுமதிக்கச் செய்யும் பிடன் ஆட்சி காலத்தின் திட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இது கியூபா, ஹைத்தி, நிகரகுவா மற்றும் வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்த 532,000 புலம்பெயர்ந்தோரின் தற்காலிக சட்டப் பூர்வ அந்தஸ்தினை ரத்து செய்ய உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பணி அனுமதிகள் மற்றும் நாடு கடத்தலில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட அதன் நன்னம்பிக்கை உறுதிக் காலம் ஆனது ஏப்ரல் 24 ஆம் தேதியன்று காலாவதியாக உள்ளது.
குடிவரவு மற்றும் தேசியச் சட்டத்தின் கீழான நன்னம்பிக்கை உறுதி ஆனது, DHS மேற் பார்வையின் கீழ் ஒரு நபருக்கு அமெரிக்காவில் நுழைந்து அங்கு தற்காலிகமாக என தங்குவதற்கான அனுமதியை அதிகாரப் பூர்வமாக வழங்குகிறது.
2022 ஆம் ஆண்டில், அதிபர் ஜோ பிடன் வெனிசுலா மக்களுக்கான நன்னம்பிக்கை உறுதி நுழைவுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தினார் என்பதோடு அதனை 2023 ஆம் ஆண்டில் கியூபா, ஹைத்தி மற்றும் நிகரகுவா போன்ற நாடுகளுக்கு அவர் அதனை விரிவுபடுத்தினார்.
இந்த நான்கு நாடுகளுடன் அமெரிக்கா எவ்வித அரசு முறை உறவுகளையும் கொண்டு இருக்கவில்லை.