அருகி வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் (CITES) தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ், செம்மரக் கட்டைகளுக்கான முக்கிய வர்த்தக (RST) மதிப்பாய்விலிருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்வதற்காக செம்மரக் கட்டைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு இது ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்.
2004 ஆம் ஆண்டு முதல் செம்மரக் கட்டைகளுக்கான முக்கிய வர்த்தக மதிப்பாய்வு (RST) செயல்முறையின் கீழ் இந்தியா கட்டுப்பட்டு இருந்தது.
CITES RST செயல்முறையானது, தங்கள் கடமைகளை நிறைவேற்றாத நாடுகளுக்கு வர்த்தக இடைநிறுத்தம் வடிவிலான ஒரு ஒழுங்குமுறை நடவடிக்கையை செயல் படுத்துகிறது.
அதிக சந்தை மதிப்புள்ள மரமான செம்மரக் கட்டைகள் ஆனது (ப்டெரோகார்பஸ் சாண்டாலினஸ்) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே காணப் படுகிறது.
இந்தியா, 1976 ஆம் ஆண்டு முதல் CITES ஒப்பந்தத்தின் உறுப்பினர் நாடாக இருந்து வருகிறது.