City of Joy கவிதை நூலின் ஆசிரியர் டொமினிக் லேபியர்
December 10 , 2022 590 days 299 0
Freedom at Midnight என்ற புத்தகத்தின் ஆசிரியர் டொமினிக் லேபியர் காலமானார்.
இவர் City of Joy என்ற கொல்கத்தா நகரத்திற்கான கவிதை நூலினை எழுதியவர் ஆவார்.
30 மொழிகளில் 50 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்ட ஆறு புத்தகங்களை எழுதும் பணியில் அமெரிக்க எழுத்தரான லாரி காலின்ஸுடன் இணைந்து பணியாற்றினார்.
இவருக்கு 2008 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
கொல்கத்தாவின் குடிசைக் குடியிருப்புப் பகுதிகளில் வாழும் தொழுநோயால் பாதிக்கப் பட்ட குழந்தைகளை மீட்க சிட்டி ஆஃப் ஜாய் என்ற அறக்கட்டளையை இவர் நிறுவினார்.
1981 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இதற்கு அவரது பல இலக்கிய வெற்றிகளின் மூலம் ஈட்டப்பட்ட பரிசுத் தொகைகள் மூலம் நிதி வழங்கப்பட்டது.