இந்திய அமெரிக்கரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலருமான சத்யா நாதெள்ளா 2021 ஆம் ஆண்டிற்கான உலக வணிக நிலைத் தன்மையின் தலைமைத்துவத்திற்கான மதிப்புமிக்க C.K. பிரஹலாத் விருதினைப் பெற்றுள்ளார்.
நாதெள்ளாவைத் தவிர மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரான பிராட் ஸ்மித், தலைமை நிதி அலுவலர் எமி ஹூட் மற்றும் தலைமை சுற்றுச்சூழல் அலுவலர் லூகாஸ் ஜோப்பா ஆகியோரும் இந்த விருதினைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நான்கு மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர்கள், இந்த நிறுவனத்தினை 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் அற்ற ஒரு நிறுவனமாக மாற்றவும், 2050 ஆம் ஆண்டுக்குள் தனது அனைத்து உமிழ்வுகளையும் நீக்கிடவும் வேண்டி அவர்கள் ஆற்றிய ஒரு ஒன்றிணைந்த தலைமைக்காக இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.