TNPSC Thervupettagam
September 8 , 2021 1329 days 687 0
  • இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பானது CORBEVAX எனப்படும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மற்றொரு கோவிட்-19 தடுப்பு மருந்திற்கான இரண்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • இது BioE கோவிட்-19 தடுப்பு மருந்து எனவும் அழைக்கப்படுகிறது.
  • இந்த மருந்தானது அமெரிக்காவின் ஹூஸ்டன் என்னுமிடத்திலுள்ள பெய்லர் மருத்துவக் கல்லூரி மற்றும் அமெரிக்க நிறுவனமான டைனவாக்ஸ்  டெக்னாலஜீஸ் ஆகியவற்றுடன் இணைந்து பயோலாஜிகல் E. லிமிடெட் எனப்படும் இந்திய உயிரி மருந்து நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
  • இது ஒரு புரத துணை அலகு தடுப்பு மருந்தாகும் (protein subunit vaccine).
  • இம்மருந்தின் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கும், 5 முதல் 18 வயதினர் மீது செலுத்தி 3 முறை பரிசோதிப்பதற்குமான ஒப்பந்தத்தினை பயோலாஜிகல் இ நிறுவனம் பெற்று உள்ளது.
  • மேலும், இந்தத் தடுப்பு மருந்தானது கோவிட்-19 சுரக்சா திட்டத்தின் கீழும் BIRAC எனும் தேசிய உயிரி மருந்து திட்டத்தின் மூலம் கோவிட்-19 ஆராய்ச்சி கூட்டமைப்பின் கீழும் நிதி உதவியைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்