TNPSC Thervupettagam

COVID-19 நோய்க்கான முதலாவது தடுப்பூசிச் சோதனை

March 19 , 2020 1586 days 561 0
  • COVID-19 நோய்க்கான தடுப்பூசியை மதிப்பிடும் முதலாவது மனிதப் பரிசோதனையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
  • இந்தத் தடுப்பூசியானது மாடர்னா என்ற தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்தச் சோதனைக் கட்டத்தின் போது, இந்தத் ​​தடுப்பூசிகள் பாதுகாப்பானதா  என்பதையும் இவை COVID - 19ஐத் தடுக்க நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதற்காக மனிதர்களின் நோயெதிர்ப்பைத் தூண்டுகின்றனவா என்பதையும் இந்த சோதனை ஆய்வு செய்ய இருக்கின்றது.
  • நானோ கொழுப்பு (லிப்பிட்) துகள்களில் பதிக்கப்பட்ட ஆர்என்ஏவின் நீட்சியிலிருந்து இந்தத் தடுப்பூசியானது தொகுக்கப் பட்டுள்ளது.
  • உலகளாவிய மருத்துவப் பரிசோதனைகளில் இந்தியாவின் பங்கு 2.7% மட்டுமேயாகும்.
  • அதேசமயம், மருத்துவப் பரிசோதனைகளில் அமெரிக்கா 47% பங்களிப்பையும் அதற்கு அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் 18% பங்களிப்பையும் ஜப்பான் 11% பங்களிப்பையும் கொண்டுள்ளன.
  • இந்த நிலைமையை மேம்படுத்த, உலக சுகாதார அமைப்பின் ICTRP போன்ற தளங்களில் இந்தியா தீவிரமாகப் பங்கேற்க வேண்டும்.
  • உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மருத்துவப் பரிசோதனைப் பதிவுத் தளம் (International Clinical Trials Registry Platform - ICTRP) என்பது சுகாதாரப் பரிசோதனைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆராய்ச்சியின் முழுமையான பார்வையானது அணுகக் கூடியதாக உள்ளதா  என்பதை உறுதி செய்யும் நோக்கமுடைய ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்