September 29 , 2021
1030 days
544
- குடியரசுத் துணைத் தலைவர் M. வெங்கய்யா நாயுடு அவர்கள் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் புத்தாக்க விருதினை வழங்கினார்.
- இந்த விருதுகளானது உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவர்களுக்கு காணொலி வாயிலாக நடைபெற்ற விழாவில் வழங்கப் பட்டது.
- அவர்கள் கிராமத்திலுள்ள சாரமக்கி நாராயண செட்டி நினைவு அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அனுஷா மற்றும் ரக்சிதா நாயக் ஆகியோர் ஆவர்.
- “சமையல் எரிவாயு சேமிப்புக் கருவி” என்ற அவர்களது திட்டத்திற்கு இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
- 14 பள்ளிகளில் இந்த விருதினைப் பெறும் ஒரே அரசுப் பள்ளி சாரமக்கி நாராயண செட்டி நினைவு அரசு உயர்நிலைப் பள்ளியாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/29-515.jpg)
Post Views:
544