லண்டனில் உள்ள ராயல் ஏரோநாட்டிகல் சங்கமானது (RAeS - Royal Aeronautical Society) 2019 ஆம் ஆண்டிற்கான அச்சங்கத்தின் கெளரவ தோழமை விருதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவரான ஜி. சதீஷ் ரெட்டிக்கு வழங்கியுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற முதலாவது இந்தியர் இவராவார்.
இந்தியாவின் முன்னணி இராணுவ அமைப்புகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த ஏவுகணைத் தொழில்நுட்பங்களுக்கான பங்களிப்புகளுக்காக இவர் அங்கீகரிக்கப்பட்டார்.
இந்த விருது பற்றி
இந்தத் தோழமை விருதானது விண்வெளித் துறையில் நோபல் பரிசாகக் கருதப்படுகின்றது.
இது உலகின் மிகவும் உயர்ந்த தனித்துவ விருதாகும். விண்வெளித் துறைக்கு மிகவும் சிறப்பானப் பங்களிப்புகளை ஆற்றியோருக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகின்றது.
முதலாவது கௌரவத் தோழமை விருதானது 1917 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.