தற்போது நடைபெற்று வரும் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகளின் சபையின் மாநாட்டு அமைப்பின் 15வது பங்குதாரர்மாநாட்டில் (CoP15) ‘Drought in Numbers 2022’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தச் சமீபத்திய மதிப்பீடானது, 196 நாடுகளில் கடந்த 122 ஆண்டுகளில் பதிவான வறட்சிகள் பற்றியும், வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான அதன் தாக்கங்கள் பற்றியும் பகுப்பாய்வு செய்தது.
2000 ஆம் ஆண்டிலிருந்து, உலகில் வறட்சிகள் அடிக்கடி ஏற்படும் நிலைகள் மற்றும் அதன் கால அளவு ஆகியவை 29 சதவீதம் அதிகரித்துள்ளது.
புவியியல் ரீதியாக, இந்தியாவின் வறட்சிப் பாதிப்பு நிலையானது, ஆப்பிரிக்காவின் துணை சஹாராப் பகுதி நாடுகளுடன் ஒப்பிடப் படுகிறது.
கடுமையான வறட்சியின் விளைவானது, 1998 முதல் 2017 வரையிலான 20 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2முதல் 5 சதவீதம் வரை குறைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.