தீன்தயாள் அந்த்யோதயா யோஜ்னா- தேசியக் கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் (DAY-NRLM) ஆனது e-SARAS என்ற கைபேசிச் செயலியினை அறிமுகப் படுத்தியுள்ளது.
சுய உதவிக் குழுக்களில் (SHGs) உள்ள பெண்களால் தயாரிக்கப்படும் பொருட்களைச் சிறந்த முறையில் சந்தைப்படுத்த உதவுதல் மற்றும் இணைய வர்த்தக வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
eSARAS இணைய தளம் மற்றும் eSARAS கைபேசிச் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களைச் செயல்முறையாக்கத்திற்கு உட்படுத்த, பின் பொதியாக்கம் மற்றும் இடமாற்றம் செய்வதற்கு இந்தப் பூர்த்தி மையம் பயன்படுத்தப்படும்.
ஒரு இயங்கலையில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களை வாடிக்கையாளரின் வீட்டிற்குக் கொண்டு வரத் தேவையானத் தளவாடங்களை இது கையாள உள்ளது.