ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் (HPCL) நிறுவனமானது E27 எரிபொருள் மற்றும் எத்தனால் கலந்த டீசல் எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்கள் மீதான ஒரு சோதனை ஆய்வினைத் தொடங்கியுள்ளது.
இது போன்ற விரிவான ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொள்ளும் இந்தியாவின் முதல் எண்ணெய்ச் சந்தைப்படுத்துதல் நிறுவனம் இதுவாகும்.
மத்திய அரசின் குழுவானது 10 முதல் 27 சதவீதம் வரையிலான எத்தனால்-பெட்ரோல் ஆகியவற்றின் வெவ்வேறு கலவைகளின் விளைவுகள் மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்கிறது.